Site icon Tamil News

ஜெர்மனியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – கணவன் கைது

ஜெர்மனிய நகரமொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் அமைந்து இருக்கின்ற ஹெர்னய் என்ற பிரதேசத்தில் 49 வயதுடைய ஒரு நபர்  பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கின்றார்.

இதன் பின்னர் கொலை செய்த அந்த  49 வயதுடைய நபரே பொலிஸாருக்கு தகவலும் வழங்கியுள்ளார்.

சம்வப இடத்திக்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளையில் 49 வயதுடைய நபர் இறந்த பெண்ணின் கணவன் என்று விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.

மேலும் இந்த 49 வயதுடைய நபர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து முரண்பாடானது மோதலாக மாறி இந்த கொலை இடம் பெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version