Site icon Tamil News

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர்ப்பம்பி நிலையங்களுக்காக மின் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையான 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01 முதல் 04 வரையான பகுதிகள் மற்றும் கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version