Site icon Tamil News

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பணம்!!! யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்

கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் காசினை பெற்றுக்கொண்டு , யாழ்ப்பாணம் பனிப்புலத்தில் தாக்குல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ,  பனிப்புலம் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காரில் சென்ற நபரை வழிமறித்த இருவர் , அவர் மீது வாள் வெட்டு தாக்குலை மேற்கொண்டனர். அத்துடன், கார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சங்கானை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , தானும் பனிப்புலம் பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனுமாக இணைந்தே தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் பணம் எமக்கு வழங்கப்பட்டது. அந்த பணத்தினை பெற்றுக்கொண்டே தாக்குதலை நடத்தியதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிசார் மீட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட நபருடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version