Site icon Tamil News

இரகசிய இராணுவ ஆவணங்கள் கசிவு – உச்சக்கட்ட நெருக்கடியில் அமெரிக்கா

அமெரிக்காவின் இரகசிய இராணுவ ஆவணங்கள் இணையத்தில் கசிந்த சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளைச் சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் முற்படுகிறது.

பத்தாண்டுக்கு முந்திய Wikileaks சம்பவத்துக்குப் பிறகு, மிகக் கடுமையான பாதுகாப்பு மீறல்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

அண்மை நாட்களில் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் ஏராளமான ரகசிய ஆவணங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பல ஆவணங்கள் உக்ரேன் போருடன் தொடர்புடையவையாகும்.

இந்தச் சம்பவம், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அபாயம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆவணங்கள் எங்கிருந்து வெளியிடப்பட்டன, அவை உண்மையானவையா என்பதை உறுதிசெய்ய, அமெரிக்க அரசாங்க அமைப்புகள் முற்படுகின்றன.

Exit mobile version