Site icon Tamil News

பிரான்ஸில் கலவரத்திற்கு நடுவே சான்ட்விச்-ஐ ருசித்து மகிழ்ந்த வாலிபர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியை சேர்ந்த கருப்பின சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்த நிலையில், பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது. கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலை தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் வன்முறைக்கு நடுவே ஒரு வாலிபர் ‘சான்ட்விச்’-ஐ ருசித்து சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது.

அதில், பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

அப்போது எதை பற்றியும் கவலைபடாமல் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்து ‘சான்ட்விச்’-ஐ ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாகியுள்ளது

Exit mobile version