அவுஸ்திரேலியாவில் இந்திய செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவிலியர் ஒருவர் வீட்டில் தீயில் சிக்கி பலியானதாக செய்திகள் வெளியாகின.
சிட்னி அருகே டுப்போவில் வசித்து வந்த ஷெரின் ஜாக்சன் (33) என்பவர் உயிரிழந்தார்.
மார்ச் 21 அன்று நடந்த விபத்தைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் டுப்போ மருத்துவமனையில் ஷெரின் வென்டிலேட்டரில் இருந்தார். இவரது கணவர் பத்தனம்திட்டா கைப்பட்டூரைச் சேர்ந்த ஜாக்சன், டெக்ஸ்டாவில் பொறியாளர்.
விபத்து நடந்தபோது ஜாக்சன் வேலை விடயமாக வெளியே சென்றிருந்தார். சம்பவம் நடந்தபோது ஷெரின் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.