Site icon Tamil News

பிரித்தானியாவின் பெரும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை : மின் தடை குறித்தும் அறிவிப்பு!

பிரித்தானியாவில் நாளைய தினம் (19.09) மழைக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையுடன் திடீர் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பல பகுதிகள் வறண்ட நிலையில் இருக்கும் அதே வேளையில், மழை நிலைமை போக்குவரத்து சிக்கல்களை கொண்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால மின் தடைகள் மற்றும் பிற சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version