Site icon Tamil News

இலங்கையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்

புத்தளத்தில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 31ஆம் திகதி, சிலாபம் பொலிஸ் பிரிவில் உள்ள நிதி நிறுவனமொன்றில் புகுந்து 7,090,939 ரூபாவை திருடியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை ஒருவர் நேற்று முன்தினம் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

தெனியாய பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடையவரே கைது செய்யப்பட்டவராவார்.

பின்னர், சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களும் மாதிவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 33 மற்றும் 46 வயதுடைய பஸ்கொட மற்றும் கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version