Site icon Tamil News

உலகின் தனிமைப்படுத்தப்பட்ட விமான நிலையம் இலங்கையில்!

உலகின் அமைதியான விமான நிலையமாக இலங்கையின் மத்தள  சர்வதேச விமான நிலையம் காணப்படுகிறது. இது உலகின் தனிமைப்படுத்தப்பட்ட விமான நிலையமாக காணப்படுகிறது.

ஏனெனில் இந்த விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 10 பயணிகளே வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் இருந்து நான்கு மணி நேர இடைவெளியில் அமைந்துள்ள இந்த வளாகம் ஒரு காடு மற்றும் சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு பத்து வருடங்களுக்கு முன்னர் விமான நிலையம் அதன் கதவுகளைத் திறந்து £159 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.

சீனாவால் அதன் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் ஒரு பகுதியாக நிதியளிக்கப்பட்டு இந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version