Site icon Tamil News

உலகின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசைகள் வெளியீடு: இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த இடம்

இங்கிலாந்தைச் சேர்ந்த Quaccarelli Symonds (QS) என்ற அமைப்பு, உலகின் உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, உலகின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசைகளை வெளியிடுகிறது.

அந்த வகையில் நேற்று வெளியான தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. ஐ.ஐ.டி. மும்பை 149வது இடத்தில் உள்ளது. இதற்கு முன் 2016ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) 147வது இடத்தில் இருந்தது. அதன் பிறகு இப்போது ஐ.ஐ.டி. மும்பை 149வது இடத்தில் உள்ளது. இது 23 தரவரிசைகள் முன்னேறி 149வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையில், இந்திய அறிவியல் கழகம் 155வது இடத்தில் இருந்து 225வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி 174 வது இடத்திலிருந்து 197 வது இடத்திற்கும் ஐ.ஐ.டி. கான்பூர் 278வது இடத்தையும், ஐ.ஐ.டி. சென்னை 250 இடங்களிலிருந்து 285 இடங்களுக்கு பின்தங்கியுள்ளது.

இந்நிலையில், மும்பை ஐஐடி 149வது இடத்தில் இருப்பது குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்த ஆண்டு குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியமைத்துள்ளார்.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. இனி குறைந்த இந்தியர்கள் சிறந்த கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, உலகிலேயே சிறந்த கல்வியாகவும் இருக்கிறது.

நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்திருத்தப்படுவதில் இருந்து தொடங்குகிறது.

780ம் இடம் பிடித்து, சிறந்து விளங்கிய சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, உலகக் கண்ணோட்டத் தரவரிசை மற்றும் QS தரவரிசை முறைகள் மற்றும் பிற முயற்சிகள் அந்த வேகத்தைத் தொடரும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version