Site icon Tamil News

நாகை – காங்கேசன்துறைமுகத்திற்கான பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைப்பு!

நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படவிருந்த கப்பல் சேவை மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டோபர் 14 ஆம் திகதி காலை 7 மணிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் கூடுதலாக நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் திகதி மாற்றம் செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது.

மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version