Site icon Tamil News

பிரேசிலில் விமான நிலையத்தில் சிக்கிய பெண் : எக்ஸ்ரேவில் தென்பட்ட மர்ம பொருள்!

பிரேசிலின் சாவ் பாலோவில் இருந்து பயணித்த பெண் ஒருவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்ரே இயந்திரத்தில் அவருடைய வயிற்றில் ஏராளமான போதை மாத்திரைகள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரின் வயிற்றில் இருந்து  60க்கும் மேற்பட்ட “கொக்கெய்ன் மாத்திரை” மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version