Site icon Tamil News

பிரான்ஸில் ஓடும் ரயிலில் குழந்தை பிரசவித்த பெண் – உதவிய பயணிகள்

பிரான்ஸில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் Meaux நகரில் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Meaux மற்றும் Château-Thierry ரயில் நிலையங்களுக்கிடையே பயணித்த ரயிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவலி எடுக்க, பயணிகளின் உதவியுடன் காலை 7.30 அளவில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக SNCF சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தடன் சரியான நேரத்தில் உதவிய ரயில் பயணிகளுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version