Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விஜேதாச ராஜபக்ச – நாளை விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்

இதன்படி, நாளை (25) காலை 10 மணிக்கு ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு 07, ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

பல மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளன.

அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தரப்பு ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version