Site icon Tamil News

மகிந்தானந்த ஏன் ரணிலுக்கு ஆதரவளிக்கிறார்?

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அபிலாமிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி இந்த நாட்டு மக்களின் பொருளாதாரத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர்  ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக நாவலப்பிட்டியில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சவாலுக்கு முகம் கொடுக்க எவரும் முன்வராத வேளையில் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய மகிந்தானந்த அளுத்கமகே, இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உழைத்த ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாக நியமித்தால் நாடும் அனைத்து மக்களும் மேம்படுத்தப்பட்டுவார்கள்.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வெற்றிபெறச் செய்த போதிலும், தான் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

Exit mobile version