Site icon Tamil News

பூமியில் நிலவும் உச்சக்கட்ட வெப்பநிலையால் அடுத்து என்ன நடக்கும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பூமியின் பருவ நிலை மாற்றம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது வரலாறு காணாத வகையில் ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெப்ப அலை அதிகரித்து உள்ளதால் காட்டுத்தீயும் பரவி வருகிறது.

பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மனித செயல்பாடுகளால் அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பனிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்ட பல ஆய்வுக்கு எடுத்ததில், அதிகபட்சமாக சீனாவின் 126 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி இருந்ததையும், கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெப்ப நிலை தொடர்ந்து நீடித்தால் பனிப்பாறைகள் உருவாகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து உள்ளதால் வெப்ப காற்றை உணர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.20 லட்சம் ஆண்டுகளில் இந்த ஜூலை மாதம் மிகவும் வெப்பமான இருக்கும் என்று கால நிலை விஞ்ஞானி கார்ஸ்டன் ஹவுஸ்டீன் தெரிவித்தார்.

ஜெர்மனியின் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹவுஸ்டீன் நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தை விட இந்த ஜூலை மாதத்தில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.

உலகளாவிய சராசரி வெப்ப நிலையின் அடிப்படையில் முழுமையாக வெப்பமான மாதமாக இந்த மாதம் இருக்கும். அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை மனிதர்கள் தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம்.

எல் நினோவின் விளைவுகள் ஆண்டின் 2-ம் பாதியில் ஜூன் மற்றும் ஜூலையில் மட்டுமே முழுமையாக வெளி வருவதால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அதிக வெப்பம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version