Site icon Tamil News

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு என்ன செய்துள்ளது : நாடாளுமன்றில் கேள்வி!

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு  விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (08.09) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதாரத் துறையில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு ஏற்கனவே 810 மருத்துவர்களும் 302 நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இங்கிலாந்தில் இன்று வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது. இங்கிலாந்து முழு மருத்துவ சமூகத்தையும் உள்வாங்க முடியும். “மேலும், உலகில் நமது மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது. அப்படியானால் நமது நாடு இல்லாமல்போய்விடும்.

மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதா? கடைசியில், மாத்திரை கொடுக்க நாட்டில் வைத்தியர்கள் இல்லை என்று சொல்லும் நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version