Site icon Tamil News

குடிநீர் கட்டண திருத்தம் குறித்து வார இறுதியில் முடிவு – அமைச்சர் ஜீவன்

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்துடன் நீர்க் கட்டணக் குறைப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் சபை, இதற்கு முன்னர் மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபா நட்டத்தை அனுபவித்து வந்த நிலையில், தற்போது 6.2 பில்லியன் ரூபா இலாபத்தை அடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version