Site icon Tamil News

யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – ஏழாலை மேற்கு புளியங்கிணற்றடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் காவல்துறைக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த ஆயுதங்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றச்செயலுக்கு பயன்படுத்துவதற்காக மறைத்துவைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் உள்ளிட்ட பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Exit mobile version