Site icon Tamil News

WC T20 – அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

அதே நாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்தியா – இங்கிலாந்து போட்டி நடைபெறும் கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில், மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைப்பட்டு ரத்து செய்யப்பட்டால் புள்ளிப் பட்டியலில் (சூப்பர் 8 சுற்று) முதலாவதாக இருக்கும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

அதாவது இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் நிலை ஏற்படும். இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது.

Exit mobile version