Site icon Tamil News

கொழும்பின் பலப் பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி காலை 8 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02 மணி வரை கொழும்பு, தெஹிவளை, கோட்டை, மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேசங்களுக்கும், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version