Site icon Tamil News

கொழும்பில் மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை  மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு தடவைகள் கொழும்பு மாநகர மண்டபத்திற்கு முன்பாகவும், ஹெவ்லொக் டவுனிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணிகள் மீது நீர்த்தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Exit mobile version