Site icon Tamil News

டெங்கு தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34,906 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் குறித்த மாவட்டத்தில் 14,248 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,452 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version