Site icon Tamil News

கொழும்பு மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

கொழும்பில் தற்சமயம் கொரோனா அல்லது வேறு எந்த தொற்று நோய்களும் பரவவில்லை என கொழும்பு மாநகர சபையின் அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.

எனினும் கொழும்பு மக்கள் எந்தவொரு பரவல் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைக்கு கொழும்பில் கொரோனா அல்லது வேறு எந்த வைரஸ் நோய்களும் பரவவில்லை. எப்படியிருப்பினும் எதிர்கால பரவலை தடுக்க முகக் கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகர சபையுடன் இணைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சுகாதாரத் துறைகளில் உள்ள மற்ற மருத்துவ நிபுணர்களுடன் சேர்ந்து கூட்டங்களை நடத்தி, நகரத்தில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் கண்டி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து இரண்டு கொரோனா மரணஙகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version