Site icon Tamil News

பிரித்தானியாவில் மின் துண்டிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை!

பிரித்தானியாவை அன்டோனி புயல் தாக்கியுள்ள நிலையில், காலநிலை குறித்த முன்னறிவிப்புகளை MET OFFICE வழங்கியுள்ளது.

இதன்படி பிரித்தானியாவில் கோடைக்காலத்தில் அரிதாக பெயக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலத்த காற்று ஏற்படும் எனவும் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

மேலுமு் தென்மேற்கு வேல்ஸிற்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து, இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version