தெஹிவளை கடற்கரைக்கு செல்பவர்களுக்கு அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தெஹிவளை ஓபன் பிரதேச கடற்கரையில் 8 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட முதலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் இதே இடத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் பிடிபட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தக் கடற்கரையில் ஆழ்கடலில் நீந்துவது மிகவும் ஆபத்தானது.
இதனால் அங்கு செல்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.