லண்டன்-டப்ளின் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அம்மை நோய் தாக்கியிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே குறித்த விமானத்தில் பயணித்தவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹெல்த் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
அம்மை நோயின் அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து வைத்திர்களின் உதவியை நாடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.