Site icon Tamil News

இலங்கையில் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின், சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பொதுச்சந்தை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Exit mobile version