Site icon Tamil News

Wall Street Journal இன் ஊழியரை விடுதலை செய்யுமாறு பைடன் வலியுறுத்து!

உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஊடகவியலாளரை விடுதலை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வலியுறுத்தியுள்ளார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையாளரான இவான் கெர்ஷ்கோவிச் ரஷ்யாவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவரை வெளியேற்றும் திட்டம் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையான FSB,  இராணுவத் தொழிற்சாலையைப் பற்றிய இரகசியங்களை சேகரித்தாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை  Wall Street Journal பத்திரிக்கை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version