Site icon Tamil News

சிங்கப்பூரில் ஊதியம் அதிகரிப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

⁸சிங்கப்பூரில் கடந்த ஆண்டு, அனைத்து பிரிவுகளிலும் ஊதியம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊதியத்தின் வளர்ச்சி விகிதம் 0.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டும் ஊதியம் அதே அளவு அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு சற்றே குறைந்து 7.2 சதவீதமாக பதிவானது. 2022ஆம் ஆண்டு அது 7.9 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு 65 சதவீத நிறுவனங்கள் சம்பள உயர்வை வழங்கின. 2022ஆம் ஆண்டு 72 சதவீத நிறுவனங்கள் சம்பள உயர்வைத் தந்தன.

இலாபம் குறைந்ததால் சம்பள உயர்வைக் கொடுக்கும் நிறுவனங்களின் விகிதம் குறைந்தது.

விரிவுபடுத்தப்பட்ட படிப்படியாக உயரும் சம்பள முறையால் உணவு-பானச் சேவை, சில்லறை வர்த்தகம்- ஆகிய துறைகளில் சம்பளம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மனிதவள அமைச்சின் அறிக்கை கூறியது.

Exit mobile version