Tamil News

அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள் – நடிகர் விஷால் பரபரப்பு

ஹேமா கமிட்டி போன்றே தமிழ் திரையுலகிலும் புதிய குழு இன்னும் 3 நாட்களில் அமைக்கப்படும் என்றும், அதில் பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் கொடுக்கலாம் என நடிகர் விஷால் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர், மலையாள திரையுலகமே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த அறிக்கை வெளியான பின்னர், கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன் லால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இவரை தவிர செயற்குழு உறுப்பினர்கள் 17 பேரும் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஷால் தமிழகத்திலும் இன்னும் மூன்று நாட்களில் ஹேமா கமிட்டி போன்றே 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டும் என்றும், இதில் பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளிக்கலாம் என பிரபல செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அட்ஜஸ்ட்மென்ட்க்கு யாராவது அழைத்தால் அவரை உங்கள் காலில் உள்ள செருப்பைக் கொண்டு அடியுங்கள் என்றும், தமிழ் சினிமாவில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version