Tamil News

“உள்ளே வராதீங்க…” திடீரென கத்திய விஜய்யின் அம்மா.. என்ன ஆச்சு?

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது, விஜய்யின் அம்மா, பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து வந்ததால், உள்ளே வரக்கூடாது என்று திடீரென அவர்களை பார்த்து கத்தினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய், அரசியல் கட்சி அறிவிப்பிற்கு பின் முதன்முறையாக தன்னுடைய பெற்றோரை சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டான நிலையில், விஜய் பெற்றோர் உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது, பத்திரிக்கையாளர்கள் இவர்களை தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால், கடுப்பான ஷோபா, நீங்க வரக்கூடாது…வரக்கூடாது என்று ஆக்ரோஷமாக கத்தினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், மகன் கட்சி ஆரம்பித்ததற்கு எனது வாழ்த்துக்களும்,ஆசிர்வாதங்களும் எனது பிள்ளைக்கு எப்போதும் இருக்கும் என்றும் கட்சியில் தற்போது தலையீடு இல்லையென்ற செய்தியாளர் கேள்விக்கு எப்போது இருக்கும் என எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்

Exit mobile version