Tamil News

ஜெய்லர் “ஹூக்கும்”க்கு பதிலடி கொடுத்ததா லியோ “படாஸ் ”

தளபதி விஜய் தனது லியோ செகண்ட் சிங்கிள் பாடல் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிலருக்கு பதிலடி கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்யின் லியோ அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது. இப்போது கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் லியோ. கடந்த வாரம் இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின.

லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது. பாஸ்கள் வழங்கப்பட்டு மேடை அமைக்கும் பணி தொடங்கியது.

ஆனால் திடீரென லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காது என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சியை ரத்து செய்ததற்கு சில காரணங்களை படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தாலும், இதற்கு பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்க வேண்டும் என்று பலரும் கூறினர்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. படாஸ் எனத் தொடங்கும் இந்தப் பாடலை விஷ்ணு எழுதி அனிருத் பாடியுள்ளார்.

இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பாடலில் வரும் ‘பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுத்து.. கொடல் உருவுற சம்பவம் உருதி..’ போன்ற வரிகளை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் குட்டி கதை சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில், லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி கதையை எதிர்பார்த்த நெட்டிசன்கள், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட பிறகு சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனைக்காக ரஜினிகாந்தை தாக்க, அதே ஹூக்கும் டெம்ப்ளேட்டை விஜய்யின் பாடலாசிரியர் பயன்படுத்தியதாக கூறுகிறார்கள்.

Exit mobile version