Site icon Tamil News

தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முதன்முறையாக பதிலடி கொடுத்தார் விஜய்?

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக முழுதாக அரசியலில் இறங்கவிருக்கிறார்.

சூழல் இப்படி இருக்க விஜய் மற்றும் திரிஷா பற்றிய வதந்திகள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவுகின்றன.

கோட் படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யே நேரடியாக தலையிட்டு திரிஷாவிடம் பேசி நடனம் ஆட சம்மதம் வாங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்பு லிஃப்ட்டில் விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். அந்தப் புகைப்படத்தையும் வைத்து ஒன்று அல்ல இரண்டு அல்ல ஓராயிரம் கதைகளை உருவாக்கிவிட்டனர்.

இப்படி நாளொரு கதையாக இருவர் குறித்தும் தொடர்ந்து பேசப்பட்டுவருகின்றது. இந்நிலையில் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திரிஷாவும் சென்றிருந்தாரோ? என்று கூறி இரண்டு படங்களை வைரலாக்கி விட்டனர்.

இந்த நிலையில், இன்று மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் விஜய் மறைமுகமாக இது பற்றி கதைத்துள்ளார்.

அதாவது சோசியல் மீடியாக்கலில் உருவாக்கப்படும் கதைகளை நம்ப வேண்டாம் என்றும், நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இது அண்மைய நாட்களாக விஜய் த்ரிஷா பற்றிய வதந்திகளுக்கு பதிலடியாகவே பார்க்கப்படுகின்றது.

 

Exit mobile version