Tamil News

ஆண்டவர் இடத்தை நிரப்ப வருகின்றார் மக்கள் செல்வன்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களிடையே டிஆர்பியில் பட்டையை கிளப்பும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டாலே போட்டி சேனல்கள் எல்லாம் தடுமாற ஆரம்பித்து விடும்.

கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல் தற்போது அதிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதை அடுத்து அந்த இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்விதான் இப்போது அதிகமாக இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப் போகும் நடிகரை தரப்பு தற்போது முடிவு செய்து விட்டது. இதற்கான ஒப்பந்தமும் தற்போது கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் மக்கள் நாயகன் எதார்த்த நாயகன் என கொண்டாடப்படும் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் ஆவார். இது ஒரு பக்கம் எதிர்பார்த்தது தான் என்றாலும் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட இருக்கிறது. மேலும் ப்ரோமோ சூட் நடந்து வருகின்றது.

அந்த வகையில் அக்டோபர் மாத முதல் வாரத்தில் சீசன் 8 கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version