Tamil News

பாசம் முற்றிப்போய் விஜய் செய்திருக்கும் வேலையை பாருங்க….

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட தளபதி, இனி படம் நடிக்கப்போவதில்லை என்ற அதிர்ச்சி அறிவிப்பையும் வெளியிட்டார்.

இப்படி திரைப்படம், சினிமா, அரசியல் என பிசியாக இருக்கும் வேலையில் சமீபத்தில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு விஜய் சென்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் கிறிஸ்துவர் மதத்தை சேர்ந்திருந்தாலும் அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தான். ஆனால் இப்பொழுது எதற்காக சாய்பாபா கோவிலுக்கு சென்று இருக்கிறார் என்ற ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளியாயிருக்கிறது.

அதாவது விஜய்யின் அம்மாவுக்கு சாய்பாபா மீது அதீத நம்பிக்கை உண்டு. அந்த வகையில் அம்மா மீது இருக்கும் பாசத்தால் சென்னையில் உள்ள அம்பத்தூர் நகராட்சியை சேர்ந்த கொரட்டூரில் சாய்பாபா கோவிலை கட்டி கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கும்பாபிஷேகத்தை கோலாகலமாக நடத்திருக்கிறார்.

அதில் விஜய், புஸ்ஸி ஆனந்த் மற்றும் விஜய்யின் அம்மா சோபனா ஆகியோர் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார்கள்.

அதற்கான புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்க்கு சொந்தமான உதயம் தியேட்டர் அருகில் இருக்கும் இடத்தில் தான் சாய்பாபா கோயில் அமைப்பதாக திட்டமிடப்பட்டது.

ஆனால் அங்கு மெட்ரோ ரயில் அமைக்கப்படுவதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்பொழுது கொரட்டூரில் இருக்கும் இடத்தில் சுமார் 8 கிரவுண்டில் நிலப்பரப்பில் சாய்பாபா கோவிலை கட்டிக் கொடுத்திருக்கிறார்.

Exit mobile version