Site icon Tamil News

பாகிஸ்தானில் மலையேறிகள் மீது சரிந்து விழுந்த பனி : ஐவர் பாதிப்பு!

பாகிஸ்தானில் மலையேறிகள் மீது பனிகட்சி விழுந்ததில் சிக்கித் தவித்த குழுவினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஐந்து பேர் கொண்ட ரஷ்ய மலையேறிகளே குறித்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் காஷர்ப்ரூமின் சிகரங்களில் ஒன்றில் ஏற முயன்ற நிலையில் மேற்படி அனர்த்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Exit mobile version