Site icon Tamil News

சர்ச்சைக்குரிய போலந்து பிஷப்பின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட வாடிகன்

ஒரு பாதிரியாரின் இல்லத்தில் ஒரு ஆண் விபச்சாரியுடன் பாலியல் விருந்து நடத்திய குற்றச்சாட்டால் அவரது மறைமாவட்டம் பாதிக்கப்பட்டுள்ள போலந்து பிஷப்பின் ராஜினாமாவை போப் ஏற்றுக்கொடுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பல மாத விசாரணைக்குப் பிறகு பிஷப் பதவி விலகினார்.

ததென்மேற்கு போலந்தில் உள்ள சோஸ்னோவிக்கின் பிஷப் க்ரெகோர்ஸ் கசாக், கடந்த மாதம் ஒரு பாலியல் விருந்துக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் அவரது பாதிரியார் ஒருவர் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, கசாக், சம்பந்தப்பட்ட பாதிரியார்களுக்காகவும், எந்தத் தவறும் செய்யாத ஆனால் அவர்களின் நடத்தையால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version