Site icon Tamil News

யேமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் கப்பல்

மூன்று “தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்கள்” ஒரு நாசகார விமான தாங்கி போர் கப்பலால் இடைமறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யேமனில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் “இஸ்ரேலில் உள்ள இலக்குகளை நோக்கி” தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USS Carney என்ற கப்பல் செங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.

இஸ்ரேலுக்கும் காசா பகுதியில் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே நடந்த போரைத் தொடர்ந்து ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஜனாதிபதி ஜோ பைடனால் உத்தரவிடப்பட்ட அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தின் ஒரு பகுதியாக பலப்படுத்தப்பட்டது.

சவூதி தலைமையிலான கூட்டணி அரசுடன் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டுள்ள யேமனில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்ள்ளது.

இதில் அமெரிக்க உயிரிழப்புகள் எதுவும் இல்லை, மேலும் “இந்த ஏவுகணைகள் எதை இலக்காகக் கொண்டுள்ளன என்பதை உறுதியாகக் கூற முடியாது, ஆனால் அவை யேமனில் இருந்து செங்கடல் வழியாக வடக்கு நோக்கி ஏவப்பட்டன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிண்டர்பாக்ஸ் பகுதியில் பரவி வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இருந்து பாதுகாப்பதற்காக மத்திய கிழக்கிற்கு இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை அனுப்புவது உட்பட விமான மற்றும் கடற்படை சொத்துக்களை அதிகரிக்க பைடன் உத்தரவிட்டுள்ளார்.

 

Exit mobile version