Site icon Tamil News

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு எதிராக ஊடுருவல் மற்றும் இணைய உளவு பார்த்ததாக மூன்று ஈரானியர்கள் மீது அமெரிக்க கிராண்ட் ஜூரி குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவின் தேர்தல் தலையீடுகள் குறித்த கவலைகள் காரணமாக இந்த குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் நேற்று அமெரிக்காவில் உள்ள மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த ஹேக்கர்கள் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரச்சார உறுப்பினர்களை குறிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மறுதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் பல முக்கிய நபர்களுக்கும் இந்த ஹேக்கர்கள் இந்தத் தகவலை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version