Site icon Tamil News

அமெரிக்க தேர்தல் : இறுதியாக மோதிக்கொள்ளும் ட்ரம்ப் மற்றும் பைடன்!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும், அந்தக் கட்சிகளின் எதிர்வரும் தேசிய மாநாடுகளில் அவர்களது வேட்பாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2019 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் இந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version