Site icon Tamil News

மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு வலியுறுத்தல்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழ் அமைப்புக்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளன.

தென்னிலங்கை சிங்கள மக்கள் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக பல கருத்துக்களை வெளியிட்டு வருவதால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர் தமிழ் மக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர்களின் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விகாரைகள்மீது கைவைத்தால் வடக்கு கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன்என அதில் மேர்வின் சில்வா அ ண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version