Site icon Tamil News

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக பலி!

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்கலையில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version