வவுனியாவில் முன்னறிவித்தல் இன்றி மின் துண்டிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் சம்பளம் கிடைத்த மறுநாள் மின் பட்டியலை செலுத்த காத்திருக்கும் நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின்சாரசபையினர் மின்சாரத்தை துண்டித்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மின்சாரசபை காரியாலயத்தில் பாவனையாளர்கள் விளக்கம் கேட்டு முரண்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.