ஹமாஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, காஸா பகுதிக்கான உதவிகளை நிறுத்தும் பல நாடுகளின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரிய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அந்த நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்வேறு நாடுகளின் உதவியுடன் காஸா பகுதியின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிவாரணம் வழங்கியிருந்தது.
எவ்வாறாயினும், ஹமாஸ் அமைப்பின் செயற்பாடுகளுக்கு அந்த அமைப்பு ஆதரவளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டினால் பிரித்தானியா உள்ளிட்ட 09 நாடுகள் தமது உதவிப் பொருட்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.