Site icon Tamil News

உக்ரைனின் போர் கைதிகளை விடுவிக்க வேண்டும் : மக்கள் கூட்டாக வலியுறுத்தல்!

ரஷ்யாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போர் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என உக்ரேனியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

50 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற குண்டுவெடிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு விழாவில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்தை நினைவுக்கூறும் வகையில், பல ஆயிரம் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று (28.07) கிய்வின் சுதந்திர சதுக்கத்தில் கூடி அஞ்சலி செலுத்தினர்.

விழாவில் உணர்ச்சிவசப்பட்ட பேச்சாளர்கள், கைதிகள் பரிமாற்றத்தில் ராணுவ வீரர்களை விடுவிக்க உக்ரைன் அரசாங்கம் கடினமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பல வீரர்களின் கூற்றுப்படி, Olenivka வெடிப்பு போரில் மிகவும் வேதனையான பக்கங்களில் ஒன்றாகும்.

Exit mobile version