Site icon Tamil News

கனேடிய பிரதமருடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கனடா, இத்தாலி, பிரித்தானியா , ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடன் இணைந்து 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தத்தை கிய்வ் உடன் செய்துகொண்டது.

மேற்கத்திய இராணுவக் கூட்டணியான நேட்டோவில் உறுப்பினராக வேண்டும் என்ற நோக்கத்தை அடையும் வரை உக்ரைனின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version