Site icon Tamil News

உக்ரைன் “நேட்டோவில் இணைய  தயாராக உள்ளது – ஜெலென்ஸ்கி

உக்ரைன் “நேட்டோவில் இணைய  தயாராக உள்ளது” என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) அறிவித்துள்ளார்.

மால்டோவாவில் நடந்த ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  போரின் போது உக்ரேனிய அகதிகளுக்கு விருந்தளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.  மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனின் எதிர்காலம் “முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் ரஷ்யாவின்  ஆக்கிரமிப்பு, ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருப்பதால் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version