Site icon Tamil News

பிலிப்பைன்ஸில் சூறாவளி தாக்கம் : இருவர் பலி!

பிலிப்பைன்ஸில் டோக்சுரி புயல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த புயல் வீடுகளின் கூரைகளை சேதப்படுத்தியதாகவும், மரங்களை வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புயல் காரணமாக  16 ஆயிரம் மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

430 மைல் (700 கிமீ) காற்று மற்றும் மழையுடன் கூடிய புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version