Site icon Tamil News

3 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதை பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது

03 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

27 மற்றும் 31 வயதுடைய சேதாவத்தை மற்றும் மட்டக்குளி பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ​ஹெந்தலை – எலகந்த பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர்களையும் ஐஸ் போதைப் பொருட்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 03 கிலோ 336 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version